ஈடு இணையற்ற நண்பர்கள்.. எண்ணற்ற கனவுகள்.. எதையும் கண்டு கொள்ளாத மனப்பக்குவம்.. துடிப்பான வாலிபம்.. அரும்பு மீசை காதல்.. பெற்றோருக்கு அடங்காத பாங்கு.. மிதிவண்டிப் பயணங்கள்.. சாலையோர மசால் பொறி.. திருட்டுத் தனமான புகைப்பழக்கம்.. சிறப்பு வகுப்பு என்று ஊர்சுற்றல்.. வெகு நேர கிரிக்கெட்.. தேர்வு நேர காய்ச்சல்.. வஞ்சிப் புகழ்ந்த ஆசிரியர்கள்.. அனுபவித்து பழகிய சற்றே அதிகமான பாட சுமை.. இன்னும் இன்னும் இது போன்ற எண்ணற்ற தடங்களை பெயர்த்தெறிந்து விட்டு இளைஞன் என்ற ஈரச் சுவரை எழுப்பியிருக்கிறோம்.. இதில் இன்னும் எத்தனை சுவடுகள் தடம் பதிக்கப் போகிறதோ!!!
அதிகாலை நேரம்... அறிவிப்பில்லா மின்வெட்டு.. தேடிப் பார்த்தேன், கைக்கெட்டும் தொலைவுகளில்.. தட்டுப்படவில்லை அந்த விசிறி... எழுந்து சென்று தேட ஒரு சோம்பேறித் தனம்...
அந்நேரம், ஜன்னலின் வழி ஒரு சில்லென்ற காற்று... நீலம் படர்ந்த அந்த அதிகாலையில், ஒரு இதம் என்னை எழுப்பியது.... சென்றே விட்டேன் ஜன்னலருகில்... என்ன அருமை... மழையின் தூறல்..., அதனூடே சிறு சாரல்.., அதிகாலை.., சில்லென்ற காற்று.., பனி படர்ந்த இருள்.., அழகு தான்.. பேரழகு தான்.. (தேர்ந்த கவிஞனைப்போல் இவைகளை வரிசைப் படுத்தாவிட்டாலும்)