வந்து சென்றோர்!

Saturday, 2 July 2011

இடை நேர கிறுக்கல்கள்... > மழையினூடே!! ~~~~~


அதிகாலை நேரம்... அறிவிப்பில்லா மின்வெட்டு.. தேடிப் பார்த்தேன், கைக்கெட்டும் தொலைவுகளில்.. தட்டுப்படவில்லை அந்த விசிறி... எழுந்து சென்று தேட ஒரு சோம்பேறித் தனம்...

அந்நேரம், ஜன்னலின் வழி ஒரு சில்லென்ற காற்று... நீலம் படர்ந்த அந்த அதிகாலையில், ஒரு இதம் என்னை எழுப்பியது.... சென்றே விட்டேன் ஜன்னலருகில்... என்ன அருமை... மழையின் தூறல்..., அதனூடே சிறு சாரல்.., அதிகாலை.., சில்லென்ற காற்று.., பனி படர்ந்த இருள்.., அழகு தான்.. பேரழகு தான்.. (தேர்ந்த கவிஞனைப்போல் இவைகளை வரிசைப் படுத்தாவிட்டாலும்)

நன்றி சொன்னேன்.... அந்த மின்வெட்டிற்கு........!

No comments:

Post a Comment