வந்து சென்றோர்!

Saturday, 17 March 2012

Tweeeeets!

திருமணத்தன்றே கெடா வெட்டி பந்தி போடும் புது சம்பிரதாயம் நம் சமூகங்களில் பெருகி வருகிறது.. ஏன்னு கேட்டா, காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்னு ஒரு யூஸ்லெஸ் ஆன்சர் வேற... என்னைப் பொறுத்த வரை, அது இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவமோ.. திருமணத்தன்றே பல உயிர்களை பலியிட்டு, புது வாழ்க்கையை துவங்குவதென்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை.. இந்து முறையில், திருமணத்தன்று வீட்டு வாசலில் வாழை மரம் கட்டுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை... வாழையடி வாழையாய் தழைக்க வேண்டிய திருமண பந்தமும் அதன் தலைமுறைகளும், ஒரு வாழைத்தாயின் மரணத்தில் ஆரம்பமாவதை எவ்வாறு சுபமாக கருதமுடியும்... மாறாக ஒரு மரக்கன்றை நம் வீட்டு முற்றத்திலோ, தோட்டத்திலோ நட்டுவைத்து துவங்கலாம், திருமணமெனும் புனித பந்தத்தை..

No comments:

Post a Comment