வந்து சென்றோர்!

Friday, 17 February 2012

கடங்காரன் ஆகிப்புட்டேன்!

பள்ளிக்கூடம் போவயில 
பொட்டிக்கட ஆயாகிட்ட 
காலணா கடல முட்டாய 
களவாண்டு திண்டு புட்டேன். 
இருபத்து மூணு வருஷம் தாண்டி 
ஞாபகந்தான் வந்தடைக்க 
திரும்பிப் போனேன்
கடனடைக்க.
"ஆயா செத்து ஏழு வருசமாயிடிச்சுங்க. நீங்க யாரு - நான் அவங்க பையன்தான்"
கேட்டதுமே பதறிப்புட்டேன்.
ஆயுசுக்கும் கடங்காரன் ஆகிப்புட்டேன் என்ன செய்வேன்?



No comments:

Post a Comment